January 06, 2025

ஜனவரி 4 ஆம் தேதி ஜே சி குமாரப்பாவின் பிறந்த தினம்

 அவரை நினைவுகூறும் வகையில், அவரது 'நிலைத்த பொருளாதாரம்' புத்தகத்தில் இருந்து ஒரு சில வரிகள் இதோ:


" தாவர உலகில் உயிர் வாழ்க்கை ஒரே இடத்தில் உள்ளது. இருக்கும் இடம் விட்டு வேறு இடத்திற்கு செல்லும் இயக்கம் அங்கு இல்லை. செடியிலிருந்து தானாக உதிரும் விதைகள் நேராகக் கீழே தான் விழ வேண்டும். தாய் செடிக்கு அருகில் தான் விழ வேண்டும். எல்லா விதைகளும் தாய் செடிக்கு அருகில் முளைத்து விட்டால், அது மூச்சு விட கூட முடியாதபடி நெருக்கடியை ஏற்படுத்தும். எனவே, அவற்றை தொலை தூரத்திற்கு கொண்டு செல்வது அவசியம். இதை செய்ய இயற்கை பறவைகளையும் மிருகங்களையும் இந்தப் பணியில் ஈடுபடுத்துகிறது. இடம் விட்டு இடம் செல்லும் உயிரினங்கள் ஒரு தனி (விசேஷப்) பணியை செய்கிறது. ஒரு செடியில் உள்ள பழத்தை ஒரு பறவை சாப்பிட்டு அதன் விதையை பல மைல்களுக்கு அப்பால் வெளியேற்றலாம். இவ்வாறு, அது செய்வது தன்னுடைய கட்டாயத்திற்கு உட்பட்டு செய்யவில்லை. தன்னுடைய பசியை தீர்ப்பதற்கு அது உண்கிறது. இவ்வாறு, தன்னுடைய அடிப்படை பணியை செய்யும் போது அது வாழ்க்கைச் சூழலில் தனக்குரிய பங்கையும் செய்து முடிக்கின்றது. 


இவ்வாறு, இயற்கையானது தன்னுடைய எல்லாவித கூறுகளையும் ஈடுபடுத்தி அவற்றின் ஒத்துழைப்பை உறுதி செய்கிறது. ஒவ்வொரு கூறும் தனக்கென உழைக்கும் போதே மற்றவற்றிற்கும் உதவுகின்றது. இயங்க கூடியவை, இயங்காதவற்றிற்கும், புலனறிவு பெற்றவை அவ்வறிவு இல்லாததற்கும் உதவுகின்றன. எனவே, இயற்கையின் எல்லா கூறுகளும் ஒரு பொது குறிக்கோளுக்காக ஒன்றுடன் ஒன்று சங்கிலி போல் தொடர்பு கொண்டுள்ளன. இயற்கை தனக்காகவே இயங்குகிறது. வன்முறை தலைதூக்கி இந்த சங்கிலியைத் துண்டிக்காமல் இந்த இயக்கம் இசைந்து தொடர்ந்தால் நிலைத்த பொருளாதாரம் உருவாகின்றது. "

No comments:

Post a Comment

நிலைத்த வேளாண்மையை நோக்கி - மர துவரை

  குரோதி வருடம் ஆவணி மாதம் விதைக்கப்பட்ட மர துவரை இம்மார்கழி மாதம் பூப்பெய்தும் பட்டம் அடைந்துள்ளது.  வருடாந்திர துவரை செடிகள் மஞ்சள் நிறத்த...